உள்ளூர் செய்திகள்

நடுரோட்டில் டெய்லர் வெட்டிக்கொலை

Published On 2023-01-08 08:51 GMT   |   Update On 2023-01-08 08:51 GMT
  • கேமரா காட்சிகள் ஆய்வு
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் திருவண்ணாமலையில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இரவு 9.30 மணிளவில் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தாமரை நகர் பகுதியில் உள்ள ஹவு சிங் போர்டு அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மர்ம கும்பல் ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டினர். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன் விரோத தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News