உள்ளூர் செய்திகள்

மீன் வளர்க்க மானியத்துடன் கூடிய நிதி உதவி

Published On 2023-02-07 14:59 IST   |   Update On 2023-02-07 14:59:00 IST
  • விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
  • கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் மாநில அரசு நிதி பங்களிப்புடன் கூடிய பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் 2021-22 கீழ் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் இதற்கு 3 சென்ட் நிலம் போதுமானது.

சொந்தமாக நிலம் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் திட்ட செலவின தொகை ரூ.7,50,000-ல் பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம் ரூ.3 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

பட்டியல் பிரிவினர்களுக்கு 60 சதவீத மானியம் ரூ.4.50 லட்சம் மானியம் வழங்கப்படும். மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை (எண்.16, 5 வது மேற்கு குறுக்கு தெரு, காந்திநகர், காட்பாடி, வேலூர் -632006 (அலுவலக தொலைபேசி எண். 0416 2240329, அலைபேசி எண். 9384824248, மின்னஞ்சல் adfifvellore1@gmail.com) தொடர்பு பெற்று விண்ணப்பிக்குமாறு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News