உள்ளூர் செய்திகள்

பஸ்களின் ஏணியில் ஏறி மாணவர்கள் ஆபத்தான பயணம்

Published On 2022-12-27 14:48 IST   |   Update On 2022-12-27 14:48:00 IST
  • பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
  • பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆரணி:

ஆரணியில் இருந்து வந்தவாசி பகுதிக்கு செல்லும் பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டு செல்கின்றனர். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இடம் கிடைக்கா மல் பஸ்சின் கூரையிலும் பின்பக்கம் உள்ள ஏணிப்படியில் நின்றும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

மாணவிகளும், பெண்களும் பஸ்சுக்குள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இது சம்பந்தமாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பல முறை புகார் தெரிவித்தும் அவர்கள் பாராமுகமாகவே உள்ளனர்.

எனவே இதுபோன்ற பயணிகள் பயணம் செய்வதை தவிர்க்க காலை 7 மணி முதல் 10 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் தேவையான அளவுக்கு கூடுதல் பஸ்களை இயக்கி பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என அனைத்து தரப் பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News