உள்ளூர் செய்திகள்

செய்யாறு அரசு பள்ளியில் மாநில அளவில் பிளஸ் 1 மாணவர் சாதனை

Published On 2022-06-29 12:06 GMT   |   Update On 2022-06-29 12:06 GMT
  • 100 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார்.
  • ஆசிரியர்கள் பாராட்டினர்.

செய்யாறு:

தமிழகத்தில் பிளஸ் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்தத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் கே.கிஷோர் குமார் வரலாறு படத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் ஒரே ஒரு மாணவனாக சாதனை படைத்துள்ளார்.

மேலும் அதே பள்ளியில் கிஷோர் குமார் 600க்கு551 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், எம். ஹேமநாத்534 மதிப்பெண் எடுத்து 2ம் இடத்தையும், வி. கார்த்திகேயன் 484 மதிப்பெண் எடுத்து 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழக அளவில் ஒரே ஒரு மாணவனாக சாதனை படைத்த கிஷோர் குமார் உள்ளிட்ட 3 மாணவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் அசோக், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

Tags:    

Similar News