உள்ளூர் செய்திகள்
யானைக்கால் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- பெரணமல்லூரில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் யானைக்கால் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம், மற்றும் மருத்துவ உபகரணங்கள், வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி, தலைமை தாங்கினார். அனைவரையும் சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், பெரணமல்லூர், பேரூராட்சி மன்ற தலைவர் வேணிஏழுமலை, ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சுகாதார ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கை, கால்களை, சுத்தம் செய்யும் முறைகளை செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்.