உள்ளூர் செய்திகள்
- உடல்நிலை பாதிப்பால் விபரீதம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். அவரது மகன் கோகுல்குமார் (வயது 30), ராணுவ வீரர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல்குமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.