உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

Published On 2023-04-12 14:15 IST   |   Update On 2023-04-12 14:15:00 IST
  • ஜவ்வாதுமலை பள்ளியில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

போளூர்:

ஜவ்வாது மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா தலைமை வகித்தார்.

தலைமை ஆசிரியர் மன்னர் சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி மானியம் பராமரிப்பு செலவு செய்தது ஒப்புதல் பெறப்பட்டது.

உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் செல்வம நன்றி கூறினார்.

Tags:    

Similar News