உள்ளூர் செய்திகள்

வேன் மீது பைக் மோதி பள்ளி மாணவி சாவு

Published On 2023-02-05 14:29 IST   |   Update On 2023-02-05 14:29:00 IST
  • அக்காள் படுகாயம்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் கள் டில்லிராணி (வயது 9), ஜெயசுதா (15). டில்லிராணி கண்ணமங்கலம் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அக்காள் - தங்கை இருவரும் மொபட்டில் கண்ணமங்கலம் நோக்கி சென்றனர். மொபட்டை ஜெயசுதா ஓட் டினார்.அப்

போது, முன்னால் சென்ற வேன் திடீரென திரும் பிய போது, எதிர்பாராதவித மாக வேனின் பின்பு றம் மொபட் மோதியது. இதில் அக்காள்-தங்கை இரு வரும் படுகாயம் அடைந்த னர்.

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டில்லிராணி பரிதாபமாக உயி ரிழந்தாள். ஜெயசுதா சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக லோகநாதன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகு மார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News