உள்ளூர் செய்திகள்

ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2023-05-21 13:34 IST   |   Update On 2023-05-21 13:34:00 IST
  • உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
  • பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி நகர தலைவர் பொன்னையன் தலைமையில் கட்சியினர் மார்க்கெட் வீதியில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கபட்ட ராஜீவ்காந்தி திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜபாபு, நிர்வாகிகள் செல்வம், வாசுதேவன், உதயகுமார், சம்மந்தம், மாணிக்கம், குருமூர்த்தி, பிள்ளையார், ஆறுமுகம், சைதை பிரபு, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News