உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் பகுதியில் மழை பெய்த காட்சி.

மழையால் மின் சப்ளை துண்டிப்பு

Published On 2022-07-01 10:39 GMT   |   Update On 2022-07-01 10:39 GMT
  • தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
  • பொதுமக்கள் அவதி

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் இந்த மழையின் காரணமாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.மழையால் மின் தடை செய்யப்பட்டது என்று மின்வாரி அலுவலர்கள் கூறினர்.

பின்னர் இரவு 8.45 மணி அளவில் மின் சப்ளை வழங்கப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News