உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி ஒருவர் சாவு

Published On 2022-09-19 15:14 IST   |   Update On 2022-09-19 15:14:00 IST
  • யார் என்று அடையாளம் தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

செங்கம்:

செங்கம் அருகே உள்ள அரசாங்கன்னி பஸ் நிறுத்தம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் அவர்மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இறந்த நபரின் மார்பு பகுதியில் நந்தகோபால் எனவும், கைகளில் ராமு, பார்த்திபன் எனவும் பச்சை குத்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து மேல்செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News