உள்ளூர் செய்திகள்

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-02-16 09:35 GMT   |   Update On 2023-02-16 09:35 GMT
  • உடல்நலக் குறைவால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

தூசி:

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள தர்மாபுரம் குளக் கரை தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 63), உடல்நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார்.

பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்து விட் டார். மயங்கிய நிலையில் இருந்த இவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட் டார்.

இது தொடர்பாக இவருடைய மகன் சக்திவேல் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News