உள்ளூர் செய்திகள்

போளூர் தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு

Published On 2022-09-24 16:10 IST   |   Update On 2022-09-24 16:10:00 IST
  • விரைவாக பணிகளை முடிக்க உத்தரவு
  • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

போளூர், செப்.24-

போளூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று அரசின் முதன்மைச் செயலாளர் வணிகவரி ஆணையர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரமான தீரஜ் குமார் ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை நிராகரிக்கப்படும் போது அதன் காரணத்தை கணினியில் பதிவு செய்கிறீர்களா இல்லையா என்று தாசில்தார் கேட்டறிந்தார்.

அவருடன் திருவண்ணாமலை கலெக்டர் முகேஷ் மற்றும் டி ஆர் ஓ டாக்டர் பிரியதர்ஷினி ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி ஏ பி ஆர் ஓ ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதே போல் அங்கிருந்து சென்று பேரூராட்சியின் மார்க்கெட் வணிக வளாகம் கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது எத்தனை கடைகள் கட்டப்படுகின்றன. இதில் எத்தனை காய் காய்கறி கடைகள் மற்றும் இதர கடைகள் எத்தனை என்று கேட்டறிந்தார் இந்த பணியை எவ்வளவு நாளில் முடிப்பீர்கள் என்றும் கேட்டிருந்தார்.

அப்போது கலெக்டர் முகேஷ் மண்டல அலுவலர் ஜிஜா பாய், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரஜ்வான் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், துணை தலைவர் சாந்தி நடராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார் போளூர் பேரூராட்சியின் உறுப்பினர் மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News