உள்ளூர் செய்திகள்

புதிதாக உயர்கோபுர மின் விளக்கு

Published On 2022-11-17 14:53 IST   |   Update On 2022-11-17 14:53:00 IST
  • எம்.பி. எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
  • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செங்கம்:

செங்கம் நகரில் புதிய பஸ் நிலையம் முதல் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வரையிலும் மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி அருகே உள்ள மேம்பாலத்தில் புதிதாக உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உயர் கோபுர மின்விளக்குகளை திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் செங்கம் மு.பெ.கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், ஏழுமலை, செந்தில்குமார், நகர செயலாளர் அன்பழகன், செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News