உள்ளூர் செய்திகள்

சாலையோரம் ஆண் பிணம்

Published On 2022-10-13 14:52 IST   |   Update On 2022-10-13 14:52:00 IST
  • கொலை செய்யப்பட்டாரா?
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

போளூர் தாலுக்கா 99 புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் மறைவான இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்த்தபோது அவர் ஒரு பையில் திருப்பதி லட்டு மற்றும் துணி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இறந்தவர் எந்த ஊர் பெயர் தெரியவில்லை இறந்த நபர் முன்பு விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து விட்டு இங்கு வந்து போட்டு விட்டு சென்று விட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News