உள்ளூர் செய்திகள்

பொன்னியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.

பெரணமல்லூர் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-03-13 08:43 GMT   |   Update On 2023-03-13 08:43 GMT
  • சூரிய பகவானுக்கு கற்பூர ஆரத்தி
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், அருகே உள்ள பரியம்பாடி, கிராமத்தில் விநாயகர், கெங்கையம்மன், பொன்னியம்மன், நவகிரக சன்னதி, ஆகியகோவில்கள் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வர்ணம் பூசி, இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு 3 யாக குண்டங்கள் அமைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து.

பிரபாகரன்பா ரதியார், சிவ முத்துபாரதியார், சிவலிங்கா ஓதுவார், ஆகிய குழுவினர் 3 காலை யாக பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு மூலிகைகள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் மேளதாளம் முழங்க புனித நீர் கலசத்தை, கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். சூரிய பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், நாட்டாண்மைதாரர்கள், சென்னை வாழ் மக்கள், விழா குழுவினர், மற்றும் இளைஞர்கள், ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News