உள்ளூர் செய்திகள்
- பணம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம்அ டுத்த ஹரி ஹரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். (வயது28). இவர் நேற்று முன்தினம் அப்துல்லாபுரம் கிராமம் மின்வாரியம் அருகே எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் திடீரென பிளேடை காட்டி மிரட்டி எம்ஜிஆர் சட்டை பையில் இருந்த 500 ரூபாய் எடுத்து ஓடினார்.
எம்ஜிஆர் கூச்சல் போடவே அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்து தூசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்ட வாலிபர் காஞ்சிபுரம் மேற்கு பகுதி பல்லவன் தெருவை சேர்ந்த தாமோதரன் 19 என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரிடம் இருந்த 500 ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து
தாமோதரனை கைது செய்தனர்.