உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2022-07-27 10:42 GMT   |   Update On 2022-07-27 10:42 GMT
  • பூட்டை உடைத்து துணிகரம்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). இவர் மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி சீதா (30). பிரபாகரனின் தாயார் கோடீஸ்வரி (55). இவர்கள் அனைவரும் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவில் இருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து மோரணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News