உள்ளூர் செய்திகள்

வாயில் கருப்பு துணி கட்டி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-01 08:26 GMT   |   Update On 2023-04-01 08:26 GMT
  • ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை:

வந்தவாசி அடுத்த தெள்ளாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன முறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News