உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-05-08 07:58 GMT   |   Update On 2023-05-08 07:58 GMT
  • கணவன் மது குடித்து தகராறால் விபரீதம்
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு (வயது 32). இவர்களுக்கு அனுஷ்குமார்(12), கோகுல் (8) ஆகிய மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் செந்தில் வேலைக்கு சரிவர செல்வதில்லை.தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் அம்மு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் அங்கு சென்று அம்முவின் உடலை கைப்பற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அம்முவின் அக்கா லட்சுமி அளித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News