- கணவர் 2-வது திருமணம் செய்ததால் விரக்தி
- உதவி கலெக்டர் விசாரணை
ஆரணி:
ஆரணி கொசப்பாளையம் குங்குலியர் தெருவை சேர்ந்த வர் கன்ராயன் என்கிற சந் தோஷ் (வயது 25).
இவர், அதே பகுதியை சேர்ந்த பர மேஸ்வரி (20) என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 6 மாதத்தில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கன்ராயன், செய்யாறு தாலுகா பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துள்ளார். இதனைய டுத்து போலீசார் கன்ராயனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் விரக்தியில் இருந்த பரமேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் சப்- இன்ஸ்பெக் டர் ரகு வழக் குப்பதிவு செய்தார். தற்கொலை செய்து கொண்ட பர மேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டு களே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் தன லட்சுமிமேல் விசாரணை நடத்தி வருகிறார்.