உள்ளூர் செய்திகள்
- 205 பேருக்கு சிகிச்சை அளித்தனர்
- இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
பன்னாட்டு அலையன்ஸ் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர் சோமு ஜூவல்லரி அதிபர் சோமசுந்தரம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டு 205 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் 45 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 10 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
மேலும் பாண்டிச்சேரி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு இலவச உணவும் வழங்கப்பட்டது.