உள்ளூர் செய்திகள்

தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து

Published On 2022-06-26 08:23 GMT   |   Update On 2022-06-26 08:23 GMT
  • பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை சின்னக் கடை தெருவில் உள்ள தனி யார் நிதி நிறுவனத்தில் நேற்று காலை மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் வீட்டு பத்திரங் கள் , வாடிக்கையாளர்களின் கடன் பெற்ற விவரம், தவணை கட்டியரசீது மற்றும் கணினி, மேசை நாற்காலி, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாச மாயின. இதுகுறித்து திருவண்ணா மலை டவுன் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News