மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
- உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்தி றனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
முகாமிற்கு, வட்டார வளமைய மேற்பார்வை யாளர் செல்வம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராம் ராமச்சந்திரன் முகாமினை தொடங்கி வைத்தார்.
கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார்கள்.
மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
88-நபர்களுக்கு அடையாள அட்டைகளை மருத்து வர்கள் வழங்கினார்கள். 9-மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டது.
வட்டார சிறப்பு பயிற்றுநர்கள், இயல் முறை வல்லுநர்கள் முகாமிற்கு வந்த மாற்று திறனாளிகளுக்கு உதவி புரிந்தனர்.