உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்ற போது எடுத்த படம்.

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

Published On 2022-08-11 09:27 GMT   |   Update On 2022-08-11 09:27 GMT
  • ஆடி பவுர்ணமியையொட்டி வழிபாடு
  • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாத பவுர்ணமி இன்று காலை 10. 20 மணிக்கு தொடங்கி நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை உள்ளது. இதையொட்டி இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

பவுர்ணமியையொட்டி வேலூர், சென்னை, பெங்களூர், சேலம், விழுப்புரம், காஞ்சீபுரம் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News