ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
- பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தல்
- ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி டவுன் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்ட கிளை தலைவர் இல.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர் களுக்கான பணி விதி வெளியிடுதல், ஊதிய உயர்வு, புதிய பணியிடம் ஏற்படுத்துதல், பதவி உயர்வு பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு மற்றும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட கிளை தலைவர் தென்னரசு துணை தலைவர் முத்துவேலன் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சண்முகம் பரசுராமன் சரவணன் தேவராஜ் திவாகர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்
இறுதியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.