உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பணிகள் தீவிரம்

Published On 2022-10-15 08:18 GMT   |   Update On 2022-10-15 08:18 GMT
  • 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
  • கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவியில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. விழா 10 நாட்கள் நடைபெறும் 7-ம் நாள் விழாவின் போது தேரோட்டம் நடைபெறும்.

கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகை தீபத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும் என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தீப திருவிழா பணிகள் தீவிரமாக நடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் மாடவீதியில் நடைபெற உள்ளது.

அதனைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் ராஜகோபுரம் எதிரே நிறுத்தப்பட்டுள்ள பஞ்சமூர்த்திகள் தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதலில் முருகர் தேரை தொடர்ந்து விநாயகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் சீரமைக்கும் பணிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

Tags:    

Similar News