உள்ளூர் செய்திகள்

வந்தவாசியில் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-30 14:28 IST   |   Update On 2022-07-30 14:28:00 IST
  • ஜிஎஸ்டி வரியை கண்டித்து நடந்தது
  • பழைய பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை ஊர்வலம் சென்றனர்

வந்தவாசி:

மத்திய அரசைக் கண்டித்து வந்தவாசி, செய்யாறு, பெரணமல்லூர் வட்டார மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்றது.

அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்த மத்திய அரசைக் கண்டித்தும், வரி விதிப்பை திரும்பக் கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவாசி வட்டாரச் செயலர் அ.அப்துல்காதர் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், ந.சேகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜா.வே.சிவராமன், எம்.மாரிமுத்து, எஸ்.முரளி ஆகியோர் பேசினார்.

முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட ஆர்ப்பாட்டத்தினர் பஜார்வீதி வழியாக தேரடி சென்றடைந்தனர்.

Tags:    

Similar News