தமிழ்நாடு செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மழையை கொடுக்குமா? - டெல்டா வெதர்மேன் விளக்கம்

Published On 2026-02-12 09:04 IST   |   Update On 2026-02-12 09:04:00 IST
  • பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும்.
  • இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. பகலில் வெப்பம், இரவில் குளிர், அதிகாலையில் பனிப்பொழிவு என்ற சூழலே இருந்து வருகிறது.

இதன் தாக்கம் வருகிற 20-ந்தேதி வரை நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அதுவரை வறண்ட வானிலையே நிலவும். பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும். மூடு பனிப்பொழிவுக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 20-ந்தேதிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்து, வெப்பம் அதிகரிக்கும்.

கடல் சார்ந்த அலைவுகள் தற்போது சாதகமாக இருப்பதால், இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மழையை கொடுக்குமா? என்பது குறித்து தனியார் வானிலை ஆய் வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

பொதுவாக பிப்ரவரி மாதங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மழை பெய்து இருக்கிறதா? என்று பார்த்தால், தமிழ்நாட்டில் 2002-ம் ஆண்டு அதிகனமழை வரையிலும், 2021-ல் கடலோர மாவட்டங்களில் கனமழை வரையிலும் பதிவாகியுள்ளது. மேலும் 1947, 1956, 1961, 1999, 2011-ம் ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்துக்கு மழைக்கான சூழல் இல்லாமல் போனது. இதற்கு முன்பு 1944-ம் ஆண்டில் புயல் ஒன்று உருவாகியது. அது சென்னைக்கு தெற்கே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

அந்த வகையில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ் வுப் பகுதி. வலுப்பெறுமா? மழையை கொடுக்குமா? என்பது குறித்து வரும் நாட்களில்தான் தெரிய வரும் என்று கூறினார்.

Tags:    

Similar News