உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-05-16 09:51 GMT   |   Update On 2023-05-16 09:51 GMT
  • அரசு மருத்துவமனையில் பிதரத பரிசோதனை
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அச்சுதன். அரசு ஊழியர். இவரது மனைவி சுலோச்சனா.

கிராம நிர்வாக உதவியாளர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் ஸ்ரீபிரியா (வயது 20). இவர் செய்யாறு அரசு கல்லூரியில் பி. ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மதியம் வீட்டின் அறையில் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார். இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஸ்ரீபிரியாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீ பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News