உள்ளூர் செய்திகள்

எரிந்த நிலையில் ஆண் பிணம்

Published On 2022-08-07 14:07 IST   |   Update On 2022-08-07 14:07:00 IST
  • போலீசில் புகார்
  • கொலையா? விசாரணை

வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஏழாச்சேரி கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

தகவல் தெரிந்த ஏழாச்சேரி கிராம நிர்வாக அலுவலர் கோகுல ராமன் தூசி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் பாதி உடல் எரிந்த நிலையில் உள்ளதால் கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News