உள்ளூர் செய்திகள்
செங்கல் சூளை தொழிலாளி விஷம் குடித்து சாவு
- உடல் நலக்குறைவால் விரக்தி
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வந்தவாசி அடுத்த ஆச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த வர் சமுத்திரம் (வயது 39), இவரது மனைவி தேவி (27) இவர்கள் குடும்பத்துடன் செய்யாறு அருகே உள்ள பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.
தேவிக்கு கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த தேவி விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அவரது கணவர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காம ல்தேவி பரிதாபமாக இறந்து விட்டார்.இது குறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.