உள்ளூர் செய்திகள்

மது விற்ற வாலிபர் கைது

Published On 2023-02-22 09:28 GMT   |   Update On 2023-02-22 09:28 GMT
  • 41 பாட்டில்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் குட்டிச் சாலை புளிய மரத்தின் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கீழ்கொடுங்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 51) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்த 41 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News