உள்ளூர் செய்திகள்

கல்லை கட்டி கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

Published On 2022-10-19 15:14 IST   |   Update On 2022-10-19 15:14:00 IST
  • குழந்தைகள் இல்லாததால் கணவருடன் அடிக்கடி தகராறு
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

கலசபாக்கம் அடுத்த கீழ்பொத்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38). இவர் போளூர் தாலுகா கொம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்த தரணி (22), என்பவரை காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இதனால் மாமனார், மாமியர், கணவருடன் அடிக்கடி தகராறு ஊற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மாதம் ஒருமுறை தாய் வீட்டிற்கு தரணி செல்வதும் அங்கு உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைப்பதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை தரணி மனம் உடைந்து காணப்பட்டார். பின்னர் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் மடியில் கல்லைக் கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர் ஆனால் தரணியை மீட்க முடியவில்லை. உடனடியாக போளூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் உடனடியாக வந்து கிணற்றில் இறந்து கிடந்த தரணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தரணியின் உறவினர் செவ்வந்தி கொடுத்த புகாரின் பேரில் கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தரணியின் கணவர் சங்கர் மற்றும் மாமனார் மாமியார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News