உள்ளூர் செய்திகள்

லாரி மோதி தலை நசுங்கி பெண் பலி

Published On 2023-03-25 08:34 GMT   |   Update On 2023-03-25 08:34 GMT
  • கணவர் கண்முன்பே பரிதாபம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி, கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவிபாலா (வயது 28), இவர்களின் மகன் தர்ஷன் (3).

இந்த நிலையில் கணபதி, மனைவி, மகனுடன் மோட் டார்சைக்கிளில் நேற்று திரு வண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள உறவி னர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந் தார்.

தூசி அருகே அய்யங்கார் குளம் கூட்டுரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்தலாரி மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதில் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

அப்போது கணவர் கண் முன்பே தேவிபாலா தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று தேவி பாலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News