ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
- போதையில் அட்டூழியம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி பழைய பஸ் நிலை யம் அருகே பள்ளிக்கூடம் தெரு முகப்பில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் ஆரணி பகுதி முகவராக ஆரணிவெற்றிலை காரர் தெருவை சேர்ந்த பால குமரன் (வயது 24) என்பவர் தனியார் ஒப்பந்தத்தில் ஏ.டி. எம். மையத்தின் பொறுப் பாளராக கவனித்து வருகிறார்.
இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 16-ந் தேதி அதிகாலை ஒருவர் நுழைந்து கண்ணாடி அறைகளை சேதப்படுத்தி பணம் திருட முயற்சி செய்துள்ளார்.
அன்று காலை பணம் நிரப்ப வந்த பாலகுமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடன டியாக கண்காணிப்பு கேம ராக்களை சோதனை செய்ததில் ஏ.டி.எம். மையத்தில் பணம் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் பாலகுமரன் புகார்கொடுத்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் கண்காணிப்பு கேம ராவில் உள்ள உருவங்களை போலீசார் தொடர்ந்து விசா ரணை செய்ததில் ஆரணி கார்த்திகேயன் சாலை நக ராட்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கலையரசன் (30) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.