உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2023-08-14 08:00 GMT   |   Update On 2023-08-14 08:00 GMT
  • தாமோதரன்(வயது23) என்ற வாலிபர் சிறுமியுடன் பழகி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது
  • சிகிச்சையின் போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

பல்லடம்:

பல்லடத்தை அடுத்த கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின் போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் போலீசார் விசாரணையில், பல்லடத்தைச் சேர்ந்த தாமோதரன்(வயது23) என்ற வாலிபர் சிறுமியுடன் பழகி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News