உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

தேங்காய்க்கு பூஜை செய்து பெண்கள் போராட்டம்

Published On 2023-07-30 06:59 GMT   |   Update On 2023-07-30 06:59 GMT
  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
  • அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே அவினாசிபாளையத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடந்த 5- ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் தொடர் காத்திருப்பு போராட்டம் 26 வது நாளாக நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று விவசாயிகளின் இந்த காத்திருப்பு போராட்டம் நிறைவு பெறுகிறது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:- அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் அடுத்த கட்டமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய போராட்டத்திற்கு பேபி ராமசாமி தலைமை தாங்கினார். கவிதா முத்துக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, நொய்யல் பாதுகாப்பு இயக்கத்தின் திருஞானசம்பந்தன், களஞ்சியம் பொன்னுசாமி, நஞ்ச ராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தேங்காய்க்கு விலை வேண்டும் என்று தேங்காய்க்கு பூஜை செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News