உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலையில் தென்னை மரங்களை சூறையாடிய காட்டு யானைகள்

Published On 2023-04-21 11:28 GMT   |   Update On 2023-04-21 11:28 GMT
  • அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் தென்னங்குருத்துகளை தின்றும் கிளைகளை முறித்தும் சேதப்படுத்தின.
  • யானைகள் அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

உடுமலை :

திருப்பூர் திருமூர்த்தி அணையின் பின்புறம் ஈசல் தட்டு கிழக்கு பகுதி விவசாயிகள் குமார், ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் தென்னங்குருத்துகளை தின்றும் கிளைகளை முறித்தும் சேதப்படுத்தின. இதனால் சுமார் 15 மரங்கள் சேதமாகின. தொடர்ந்து யானைகள் அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இரவு நேரம் தோட்டத்தில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே யானைகளை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News