உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குரூப்-1 தேர்வர்களுக்கு வாராந்திர மாதிரித்தேர்வு

Published On 2022-09-02 10:31 GMT   |   Update On 2022-09-02 10:31 GMT
  • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
  • குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.அக்டோபர் 30 ந் தேதி நடக்க உள்ள, அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதிரித்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாரம் தோறும் நடத்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கான முதல் மாதிரித்தேர்வு சமீபத்தில் நடந்தது. பயிற்சி பெற்று வரும் 148 பேர் மாதிரி தேர்வு எழுதினர். கடந்த தேர்வுகளில் வழங்கிய, கேள்வித்தாள்களை கொண்டு, தேர்வு நடத்துவதன் வாயிலாக பயிற்சி மாணவர் அதிகம் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News