உள்ளூர் செய்திகள்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய காட்சி .

விநாயகர் சதுர்த்தி விழா தாராபுரத்தில் போலீசாருடன் எஸ்.பி., ஆலோசனை

Published On 2022-08-30 08:19 GMT   |   Update On 2022-08-30 08:19 GMT
  • போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.
  • விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார்.

தாராபுரம் :

தாராபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.அப்போது கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் இடங்களான பொள்ளாச்சி ரோடு அமராவதி ரவுண்டானா, பெரிய கடை வீதி, டி.எஸ். கார்னர் , ஐந்து சாலை சந்திப்பு மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆறு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன் பிறகு தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 11 பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முத்துவல்லி மற்றும் தலைவர்களிடத்தில் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முஸ்லிம் ஜமாத்தாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார். அதற்கு ஜமாத்தாரும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் சுல்தானிய பள்ளிவாசல், மரக்கடை பள்ளிவாசல், கண்ணன் நகர் பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் போது தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போலீசார்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News