உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூா் கனிமவளத்துறை உதவி இயக்குநா் சென்னைக்கு பணியிட மாற்றம்

Published On 2023-06-09 06:48 GMT   |   Update On 2023-06-09 06:48 GMT
  • பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.
  • கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்ட, கனிமவளத் துறை உதவி இயக்குநராக பணியாற்றியவா் வள்ளல். இவரை, பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத், கனிமவளத் துறை உதவி இயக்குநா் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா். இதையடுத்து தமிழக கனிமவளத் துறை ஆணையா் வெளியிட்ட அறிவிப்பில், உதவி இயக்குநரை பணியில் இருந்து விடுவிக்க கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

இதைத்தொடா்ந்து மீண்டும் திருப்பூா் மாவட்ட உதவி இயக்குநராக வள்ளல் பணியில் சோ்ந்தாா். இந்நிலையில், திருப்பூா் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் வள்ளல், சென்னை கிண்டி கனிமவளத்துறை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக கனிம வளத் துறை உதவி இயக்குநராக சச்சின் ஆனந்த் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். 

Tags:    

Similar News