உள்ளூர் செய்திகள்

திருமுருகன்பூண்டி ஏ.வி.பி.பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

Published On 2022-12-10 07:50 GMT   |   Update On 2022-12-10 07:50 GMT
  • தமிழ் ஆசிரியை பாரதியாரை புகழ்ந்து கவிதை பாடினார்.
  • மாணவியரின் “அச்சமில்லை” பாடலுக்கான நடனம் இடம் பெற்றிருந்தது.

திருப்பூர் : 

திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

விழாவின் தொடக்கமாக 9-ம் வகுப்பு மாணவி வரவேற்புரை வழங்க, தமிழ் ஆசிரியை பாரதியாரை புகழ்ந்து கவிதை பாடினார். பாரதியாரின் சித்திரம் மிக பிரம்மாண்டமாக வரையப்பட்டிருந்தது.

கலைநிகழ்ச்சிகளாக மாணவ, மாணவியர்களது நடனம், பாரதியார் பற்றிய சிறப்புரை, பாரதியார் வேடம் அணிந்த ஏராளமான மாணவ, மாணவியரின் "அச்சமில்லை" பாடலுக்கான நடனம் இடம் பெற்றிருந்தது.

விழாவில் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் 9-ம் வகுப்பு மாணவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News