உள்ளூர் செய்திகள்

குப்பைமேடாக காட்சியளிக்கும் பயணிகள் நிழற்குடையை படத்தில் காணலாம்.

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய நிழற்குடை

Published On 2022-07-14 11:48 GMT   |   Update On 2022-07-14 11:48 GMT
  • தனியார் பள்ளி அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
  • நிழல்குடையை தற்போது சிலர் ஆக்கிரமித்து மது அருந்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

 உடுமலை :

உடுமலை தளி ரோட்டில் எலையமுத்தூர் பிரிவில் தனியார் பள்ளி அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழல்குடையை தற்போது சிலர் ஆக்கிரமித்து மது அருந்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மதுஅருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து விட்டும் சென்று விடுகின்றனர். இதனால் பயணிகள்நிழற்குடைக்குள்சென்று காத்திருப்பதற்கு‌ பதிலாக ரோட்டில் நிற்கும் நிலை உள்ளது. எனவே நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News