உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அவினாசியில் லிங்கேஸ்வரர் ராஜகோபுரத்துக்கு பாலாலயம் நாளை நடக்கிறது

Published On 2023-08-02 07:54 GMT   |   Update On 2023-08-02 07:54 GMT
  • அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது.
  • அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.

அவினாசி, ஆக.2-

அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது. இங்கு ஸ்ரீ கருணாம்பிகை உடனமர்அவினாசி லிங்கேசஸ்வரர் அமைந்து ள்ளார். இக்கோவில் கும்பாபி ஷேகம் நடத்துவதற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதி விமானங்களுக்கு ஹோமம் நடத்தி பாலாலயம் செய்யப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர். அதன்படி நாளை 4ந்தேதி காலை 9 மணியளவில் சிறப்பு வழிபாடு, ஹோமம் மற்றும் பாலாலயம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News