உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தாராபுரத்தில் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த பகுதிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு

Published On 2023-11-06 16:16 IST   |   Update On 2023-11-06 16:16:00 IST
  • தெருவிளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனா்.
  • மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் காமராஜபுரம், மஸ்தான் நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தாா்.

தாராபுரம்:

தாராபுரத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டுக்கு பட்டா கேட்டு பொதுமக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் ஆய்வு மேற்கொண்டாா்.

தாராபுரம் நகரில் காமராஜபுரம், வடதாரை, சூளைமேடு, நேரு நகா், குறிஞ்சிப்பாடி, அம்பேத்கா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனா். ஆனால் மேற்கண்ட வீடுகளுக்கு பட்டா இல்லாததால் தெருவிளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனா். இதையடுத்து குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு கலெக்டரிடம் இப்பகுதி மக்கள் தொடா்ச்சியாக விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் காமராஜபுரம், மஸ்தான் நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், நகரமன்ற தலைவா் பாப்புக்கண்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News