உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆசிரியர்கள். 

திருப்பூர் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

Published On 2022-09-05 08:13 GMT   |   Update On 2022-09-05 08:13 GMT
  • மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
  • ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் :

திருப்பூர் பள்ளிகளில் இன்று ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேப்போல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.  

Tags:    

Similar News