உள்ளூர் செய்திகள்

விழாவில் பெண் நிர்வாகிகளை பாராட்டி காங்கயம் மகாராஜா குரூப் நிறுவன அதிபர் ராக்கியப்பசாமி வாழ்த்து மடல் வழங்கிய காட்சி. 

காங்கேயத்தில் தமிழர் பாரம்பரிய கலை விழா

Published On 2023-03-27 11:25 GMT   |   Update On 2023-03-27 11:25 GMT
  • வள்ளி கும்மியாட்டம் கலை விழா நடைபெற்றது.
  • தமிழர் திருநாளாம் தை 3ம் நாள் தமிழர் கலைமன்றத்தின் கலை நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

காங்கேயம் :

காங்கேயம் தமிழர் பாரம்பரியகலை மன்றத்தின்சார்பில் கவுண்டம்பாளையம் தனியார் கலை அரங்கில் வள்ளி கும்மியாட்டம் கலை விழா நடைபெற்றது. இதில் காங்கேயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்கு மார் தலைமை தாங்கினார். மன்ற காப்பாளர் லதா மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். அனைவரையும் மன்ற நிர்வாகிகள் வரவே ற்றனர். அப்போது மன்ற பெண் நிர்வாகிகள் உ்்ட்பட 200 பேர் கலந்து கொண்டு வள்ளி கும்மியாட்டம் ஆடினர். விழாவில் கலந்து கொண்டு் சிறப்பாக ஆடிய அனைவருக்கும் பாராட்டும், பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. தமிழர் பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்,ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் திருமணம், கும்பாபிஷேகம், கோவில் திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சி களில் கலந்து கொண்டு நடத்துவது , அழிந்து வரும் கலைகளை வளர்க்க தகுதியான ஆசிரியர்களை கொண்டுவருடம் முழுவதும்சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பு கள் நடத்துவது , தமிழர் திருநாளாம் தை 3ம் நாள் தமிழர் கலைமன்றத்தின் கலை நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த விழாவில் காங்கேயம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள், பொதுநல ஆர்வலர்கள், மன்ற நிர்வாகிகள் உள்பட சுமார் 750 பேர் கலந்து கொ ண்டனர்.

Tags:    

Similar News