ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு காப்பீடு தொகை
- காசோலையை மாணவர்களின் தாயாரிடம் வழங்கப்பட்டது.
- பள்ளி மூலமாக விபத்து காப்பீட்டு தொகை ரூ.4லட்சம் பெறப்பட்டது.
திருப்பூர் :-
திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் பயிலும் நவீனா மற்றும் ஹரிகரனின் தந்தை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இதையடுத்து பள்ளி மூலமாக விபத்து காப்பீட்டு தொகை ரூ.4லட்சம் பெறப்பட்டு அதற்கான காசோலையை மாணவர்களின் தாயாரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கி பேசினார். பள்ளி முதல்வர் மணிமலர் வரவேற்று பேசினார். செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் மணிகண்டபிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். யுனைட்டடு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் குமரேசன் விபத்து காப்பீட்டின் அம்சங்களை விளக்கினார். காப்பீடு வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, காப்பீடு ஆலோசகர் ராஜ சுகுமார் கலந்து கொண்டு பேசினர்.
பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி மாணவர்களின்தாயாரிடம் காப்பீடு தொகைக்கான காசோலையை வழங்கினார். முடிவில் பள்ளியின் பொருளாளர் சுருதி நன்றி கூறினார்.