உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வங்கி கடன் உதவி பெற்று வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிகளுக்கு மானியம்

Published On 2023-09-26 07:36 GMT   |   Update On 2023-09-26 07:36 GMT
  • வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் கணினி திறனுடன் இருத்தல் அவசியம்.

திருப்பூர்:

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வங்கிக்கடன் உதவி பெற்று வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் பட்டதாரிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

தகுதிகளானது வேளாண்மை , தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் முடித்திருக்க வேண்டும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம் அல்லது வங்கி கடன் உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிகின்ற நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்களாவன 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, துவங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை ஆகும்.

2023-24 ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 52 கிராம பஞ்சாயத்துகளில் தொழில் துவங்க விண்ணப்பிக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லதுவேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று வங்கி கடனுடன் வேளாண் சார்ந்த தொழிலை துவங்க முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்கண்ட திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி,வட்டி மானியம் போக கூடுதல் மானியமாக விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் வரை, வங்கி கடன்ஒப்புதல் பெற்ற பிறகு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள் அக்ரிஸ்நெட் இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும்.

தங்களின் விரிவான திட்டஅறிக்கையை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர்அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News